search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ேகாவிலில் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி.
    • ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்பெருமாள் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-2 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி இரவு 6.36 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: அவிட்டம் காலை 6.26 மணி வரை பிறகு சதயம் நாளை விடியற்காலை 4.47 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்பெருமாள் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி. சிதம்பரம், திருநெல்வேலி, திருக்குற்றாலம் கோவில்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமிக்கு காலை சிறப்பு சோமவார அபிஷேகம் அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஊக்கம்

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-பெருமை

    கடகம்-புகழ்

    சிம்மம்-நிம்மதி

    கன்னி-உற்சாகம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-பரிவு

    தனுசு- சாந்தம்

    மகரம்-போட்டி

    கும்பம்-தேர்ச்சி

    மீனம்-மேன்மை

    Next Story
    ×