என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதி கோவிலில் ஏழுமலையான் முன்பு நாளை வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு
- வார விடுமுறை இறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
- நேற்று இரவு முதலே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை கொண்டாடப்படுகிறது.
நாளை உற்சவர் ஏழுமலையான் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருவாய் கணக்கு, வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு கணக்குகள் சமர்ப்பிக்கப்படும்.
அப்போது சிறிது நேரம் பக்தர்கள் முன்னிலையில் சாமி நிறுத்தப்படுவார். தங்க வாசல் அருகே சர்வ பூபால வாகனத்தில் இந்த ஐதீக முறை நடத்தப்படுகிறது. அப்போது உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் இவர்களுடன் சேனாதி பதியாக கருதப்படும் விஷ்வகேஸ்வரரும் காட்சி அளிக்கிறார்.
பின்னர் தேவஸ்தான கோவில் சாவி மூலவரின் காலடியில் வைத்து பூஜை செய்த பின்னர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
ஆனிவார ஆஸ்தானம் இம்முறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார விடுமுறை இறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நேற்று இரவு முதலே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 15 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 72,195 பேர் தரிசனம் செய்தனர். 35,967 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 4.24 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்