search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தமிழக கோவில்களில் இருந்து மலேசியா பத்துமலை முருகன் கோவிலுக்கு அனுப்பப்பட்ட வஸ்திர மரியாதை
    X

    வஸ்திர மரியாதை - மாலைகள் சென்றடைந்த காட்சி.

    தமிழக கோவில்களில் இருந்து மலேசியா பத்துமலை முருகன் கோவிலுக்கு அனுப்பப்பட்ட வஸ்திர மரியாதை

    • ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலுக்கும் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகின்றன
    • ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து மைசூர் ஸ்ரீ சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கு மரியாதை வழங்கப்பட்டு வருகின்றன

    2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், "பிற மாநிலங்கள், பிற நாடுகளிலுள்ள கோவில்களுடன் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களில் இருந்து வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இருந்து ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன சுவாமி கோவிலுக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி கோவிலில் இருந்து கர்நாடக மாநிலம் மேல்கோட்டை செல்வ நாராயண பெருமாள் கோவிலுக்கும், ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து மைசூர் ஸ்ரீ சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் இருந்து ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலுக்கும் வஸ்திர மரியாதை மற்றும் மாலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை சுப்பிரமணியர் கோவில் மற்றும் கொடுமலை விநாயகர் கோவிலுக்கு தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து வஸ்திர மரியாதை, மாலை ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×