search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்

    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, விஸ்வரூப பூஜைகள் நடந்தது. பின்னர் சாமி சன்னதியின் முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு மஞ்சள் பொடி, பால், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிடுதல் வைபவம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி, 5-ந்தேதி சவுந்தர சபாவில் நடராஜ பெருமான் திருநடன காட்சி, 6-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.

    பணகுடி ராமலிங்கசுவாமி-சிவகாமி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விழா நாட்களில் கும்பாபிஷேக பூஜை, சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 3-ந்தேதி தேரோட்ட திருவிழாவும், 10-ம் திருவிழா அன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

    Next Story
    ×