என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் 2024-ம் ஆண்டு குடமுழுக்கு
- இந்த கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
- விமானங்களின் படங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தர்ம சம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சரபேஸ்வரர் தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று காலை திருப்பணி தொடக்க நிகழ்ச்சியான பாலாலயம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கடங்கள் கோவில் பிரகாரம் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
கம்பகரேஸ்வரர் சன்னதியில் அமைக்கப்பட்டிருந்த விமானங்களின் படங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதாவது:-
ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் காசாளர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்