search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்
    X

    திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

    • 10-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிய ருளினார்.

    நிறைவு நாளான 10-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    காலை 5.35 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் அஜித், தலைமை கணக்கர் அம்பலவாணன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், பணியாளர்கள் ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், முருகேசன், கார்த்திகேயன், பால்ராஜ், மாரிமுத்து, ஜெகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    Next Story
    ×