search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5-ந்தேதி தைப்பூசம்
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5-ந்தேதி தைப்பூசம்

    • நாளை சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட நாள் ஆகும்.
    • இதை முன்னிட்டு சனிக்கிழமை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30-க்கு விஸ்வருபம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறுகிறது.பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை நடைபெற்று கோவில் திருக்காப் பிடப்படும்.

    மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறு கிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நாளை (வெள்ளிக் கிழமை) சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட நாள் ஆகும். இதை முன்னிட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

    Next Story
    ×