என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருமலை வசந்த மண்டபத்தில் துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜை
Byமாலை மலர்6 Nov 2022 8:11 AM GMT
- கார்த்திகை மாதத்தையொட்டி விஷ்ணு பூஜை நடந்து வருகிறது.
- இந்த பூஜையின் முக்கியத்துவத்தை பக்தர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி விஷ்ணு பூஜை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜை நடந்தது.
கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அத்துடன் லட்சுமி நாராயண சிலைகள் மற்றும் துளசி மற்றும் நெல்லி செடிகளுடன் அமரவைக்கப்பட்டனர். அதன் பிறகு துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜையை அர்ச்சகர்கள் நடத்தினர்.
அப்போது தேவஸ்தான வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரிலு கார்த்திகை மாதத்தின்போது துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜையின் முக்கியத்துவத்தைப் பற்றி பக்தர்களுக்கு விளக்கி கூறினார்.
பூஜையில் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர், கோவிந்தராஜ தீட்சிதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X