search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வராகி அம்மன் பால் குடிக்கும் நிகழ்வால் பக்தர்கள் பரவசம்
    X

    வராகி அம்மன் பால் குடிக்கும் நிகழ்வால் பக்தர்கள் பரவசம்

    • அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.
    • வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் உள்பிரகாரத்தில் வனவாராஹி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு தினமும் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.

    குறிப்பாக பஞ்சமி திதியில் அம்மனுக்கு அதிகாலை முதல் நடக்கும் சிறப்பு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி நேற்று நாகபஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    அப்போது பக்தர்கள் கொடுத்த பிரசாத பாலை நைவேதியம் செய்வதற்காக கரண்டியில் பாலை எடுத்துச் சென்றபோது அம்மன் அதனை குடித்தது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    தொடர்ந்து கரண்டியில் பாலை எடுத்து அம்மன் வாய் அருகே எடுத்துச் சென்றபோது அது முற்றிலும் காலியானது. இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு பக்தராக தாங்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இதனால் அவர்கள் பக்தி பரவசத்தால் உற்சாகம் அடைந்தனர்.

    Next Story
    ×