search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • பிரதமர் மோடி அமீரகத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பார்த் மார்ட் என்ற வணிக மையத்தை திறந்துவைத்தார்.

    துபாய்:

    வளைகுடா நாடுகளுடன் பெட்ரோலிய பொருட்களுக்கு அப்பாலும் வணிக உறவினை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் பாரத் மார்ட் என்னும் புதுமையான வணிக மையத்தை துபாயில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதில் ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை அதிபர் மற்றும் பிரதமரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கலந்துகொண்டார்.

    இதற்கான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும்.

    சுமார் 1 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த பாரத் மார்ட், கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் வசதிகளை ஒருங்கே கொண்டிருக்கும். கனரக இயந்திரங்கள் முதல் அன்றாட தேவைக்கான எளிய பொருட்கள் வரை சகலமானதையும் இங்கே பெறலாம்.

    • இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
    • ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தாகும்.

    இந்நிலையில், ஐதராபாத் டெஸ்டில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற சமன் செய்தபோது இந்திய அணி 54.16 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு புள்ளிகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருந்தது.

    ஐதராபாத் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியால் உலக சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு பின்தங்கியது. 2-வது இடத்தில் இருந்து 3 இடங்கள் பின்தங்கி சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய அணி 54.16 புள்ளியில் இருந்து 43.33 புள்ளிகளாகக் குறைந்து இருக்கிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்றாலும் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 55.00 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், வங்காளதேசம் 4-வது இடத்திலும் உள்ளன. இந்த 3 அணிகளும் தலா 50 சதவீத புள்ளிகளுடன் உள்ளன.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முறையே 6 முதல் 9-வது இடங்களில் உள்ளன.

    • சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்தனர்.
    • ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

    அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
    • இதனால் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    துபாய்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் 3-0 என பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா 56.25 சதவீதத்துடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

    இந்தியா 54.16 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 50 சதவீதத்துடன் 3ம் இடத்திலும், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும், வங்காளதேசம் 50 சதவீதத்துடன் 5-ம் இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • டெஸ்ட் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது.
    • இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    துபாய்:

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, தொடரை 1-1 என சமன் செய்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 1 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி 117 ரேட்டிங் உடன் 2-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி 4-வது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது.
    • இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

    துபாய்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் 2 புள்ளிகளை இழந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்தது. மற்றொன்று டிரா ஆனது. இதன்மூலம் 26 புள்ளிகள் பெற்று 54.16 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது.

    இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா 2 டெஸ்டில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    நியூசிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் மூன்றாவது இடம் பிடித்தது.

    ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும், வங்காளதேசம் 5-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் சுப்மன் கில் 2-வது இடத்திலும், இந்திய அணியின் விராட் கோலி 3-வது இடத்திலும், ரோகித் சர்மா 4-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 6வது இடத்திலும் உள்ளனர்.

    அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 7-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 8-வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 9-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    • தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.
    • ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

    ஏற்கனவே, இந்தியாவின் ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தான் நடப்பு சீசனில் அதிகம் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
    • சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், வங்காளதேச அணியின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

    சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    • இந்தியாவின் குமார் குஷக்ராவை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
    • தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், இந்தியாவின் குமார் குஷக்ராவை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

    ஏற்கனவே சமீர் ரிஸ்வி 8.40 கோடி ரூபாய்க்கும், ஷாருக் கான் 7.40 கோடி ரூபாய்க்கும், ஷர்துல் தாக்குர் 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

    • தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.
    • சமீர் ரிஸ்வியை சென்னை அணி 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

    இந்தியாவின் ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும், சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    • இந்தியாவின் சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.
    • ஏற்கனவே ஷர்துல் தாக்குரை சென்னை அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், இந்தியாவின் சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    ஏற்கனவே, சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    ×