search icon
என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    புதுக்கோட்டை, திருமயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    X

    புதுக்கோட்டை, திருமயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    • புதுக்கோட்டை, திருமயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தப்படுகிறது.
    • இத்தகவலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரிநகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்சார வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமயம் துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமாரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் திருமயம், மணவாளன்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியர்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, கே.பள்ளிவாசல், பி.அழகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரியப்பட்டி, ராங்கியம், கொல்லக்காட்டுப்பட்டி, கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி.லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருமயம் கோட்ட உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×