என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
X
சூரிய நமஸ்கார பயிற்சியினால் கிடைக்கும் பொதுவான பயன்கள்
Byமாலை மலர்4 July 2018 3:21 AM GMT (Updated: 4 July 2018 3:21 AM GMT)
சூரிய நமஸ்கார யோகாவை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் பல்வேறு உடல் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம். இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
உடலின் இயக்கத்திற்கு முக்கியமாக பயன்படும் சுரப்பிகளுக்கும், உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டுவதன் மூலம் மூப்பையும், பிணிகளையும் எளிதில் அணுக முடியாதபடி தடுத்து நீண்ட ஆயுளை அளிக்கிறது.
உடலின் இயக்கம் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்படுவதால் சிறுவயதினரின் உடல் மன வளர்ச்சி சரியாக அமைய உதவுகிறது. உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற ஊளைச் சதைகளை கரைத்து அழகான உடல் வடிவை அளிக்கிறது. கல்வி பயில்வோருக்கு பரீட்சை நேரத்தில் உண்டாகும் பயம், படபடப்பை நீக்குகிறது.
சூரிய நமஸ்கார பயிற்சியினால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இதனால் இருதய பாதிப்பு நேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நுரையீரல், குடல், சிறுநீரகம், தோல் முதலியவற்றிலிருந்து கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற உதவுகிறது. ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. மலச்சிக்கல் அஜீரணம் மற்றும் வயிற்றில் வாயுவினால் உண்டாகும் கோளாறுகளை விரைவில் நீக்கி ஜீரண சக்தியை மிகச் செய்கிறது.
உடலின் இயக்கம் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்படுவதால் சிறுவயதினரின் உடல் மன வளர்ச்சி சரியாக அமைய உதவுகிறது. உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற ஊளைச் சதைகளை கரைத்து அழகான உடல் வடிவை அளிக்கிறது. கல்வி பயில்வோருக்கு பரீட்சை நேரத்தில் உண்டாகும் பயம், படபடப்பை நீக்குகிறது.
சூரிய நமஸ்கார பயிற்சியினால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இதனால் இருதய பாதிப்பு நேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நுரையீரல், குடல், சிறுநீரகம், தோல் முதலியவற்றிலிருந்து கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற உதவுகிறது. ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. மலச்சிக்கல் அஜீரணம் மற்றும் வயிற்றில் வாயுவினால் உண்டாகும் கோளாறுகளை விரைவில் நீக்கி ஜீரண சக்தியை மிகச் செய்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X