என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கண்களை தூய்மைபடுத்தும் த்ராடகா ஆசனம்
Byமாலை மலர்1 Nov 2018 3:04 AM GMT (Updated: 1 Nov 2018 3:04 AM GMT)
இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும்.
பெயர் விளக்கம்: கண்களை தூய்மைபடுத்தும் பயிற்சியே த்ராடகா.
செய்முறை: ஒரு சிறிய முக்காலி அல்லது நாற்காலியின் மேல் எரியும் குத்து விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை வைக்கவும். அங்கிருந்து ஒரு மீட்டருக்கு பின்னால் அனுகூலமான தியான ஆசனத்தில் உட்காரவும். தீபத்தின் சுடர் கண்களுக்கு நேராக இருக்கட்டும். கைகளை நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும்.
முதலில் 1 முதல் 2 நிமிடம் உற்றுப் பார்க்க பழகவும் தொடர்ந்த பயிற்சியில் நேரத்தை அதிகப்படுத்தி 10 முதல் 15 நிமிடம் வரை செய்யவும்.
பயிற்சியின் இடை, இடையில் கண்களை மூடி புறத்தில் பார்த்த அக்னி சுடர், புருவ நடுவில் பிரகாசிப்பது போல் கற்பனையாக நினைத்துப் பார்க்கவும். பயிற்சியின் முடிவில் கண்களை மூடவும். உள்ளங்களையும் நன்றாக தேய்த்து மூடிய கண்களின் மேல் இரு உள்ளங்களையும் சில நிமிடம் வைத்திருக்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு முகத்திற்கு முன்பாக இருக்கும் கைகளை எடுத்து வலது உள்ளங்கையை கண்ணால் பார்க்கவும்.
பயன்கள்: கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும். நினைவாற்றல் மிகும். மன ஒருநிலைப்பாடு அதிகரிக்கும். மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.
செய்முறை: ஒரு சிறிய முக்காலி அல்லது நாற்காலியின் மேல் எரியும் குத்து விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை வைக்கவும். அங்கிருந்து ஒரு மீட்டருக்கு பின்னால் அனுகூலமான தியான ஆசனத்தில் உட்காரவும். தீபத்தின் சுடர் கண்களுக்கு நேராக இருக்கட்டும். கைகளை நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும்.
மெதுவாக கண்களை திறந்து இமைக்காமல் தீபத்தின் சுடரை உற்றுப் பார்க்கவும். பயிற்சியின் போது தீபத்தின் சுடர் அசையாமல் ஒரே சீராக எரிய வேண்டும்.
பயிற்சியின் இடை, இடையில் கண்களை மூடி புறத்தில் பார்த்த அக்னி சுடர், புருவ நடுவில் பிரகாசிப்பது போல் கற்பனையாக நினைத்துப் பார்க்கவும். பயிற்சியின் முடிவில் கண்களை மூடவும். உள்ளங்களையும் நன்றாக தேய்த்து மூடிய கண்களின் மேல் இரு உள்ளங்களையும் சில நிமிடம் வைத்திருக்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு முகத்திற்கு முன்பாக இருக்கும் கைகளை எடுத்து வலது உள்ளங்கையை கண்ணால் பார்க்கவும்.
பயன்கள்: கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும். நினைவாற்றல் மிகும். மன ஒருநிலைப்பாடு அதிகரிக்கும். மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X