என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
X
சிறுதானிய அடை செய்வது எப்படி
Byமாலை மலர்27 April 2016 5:10 AM GMT (Updated: 27 April 2016 5:10 AM GMT)
சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு - கால் கிலோ
கேழ்வரகு - கால் கிலோ
சோளம் - கால் கிலோ
கொள்ளு - கால் கிலோ
பாசிப் பயறு - கால் கிலோ
குதிரைவாலி - கால் கிலோ
சாமை அரிசி - கால் கிலோ
வரகரிசி - கால் கிலோ
முழு கறுப்பு உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்
கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - சிறிதளவு
முருங்கை கீரை - 2 கைப்பிடி
செய்முறை :
* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை அனைத்தையும் காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.
* இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
* அரைத்த மாவை உப்பு, முருங்கை கீரை போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அடையாகத் ஊற்றி, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்.
கம்பு - கால் கிலோ
கேழ்வரகு - கால் கிலோ
சோளம் - கால் கிலோ
கொள்ளு - கால் கிலோ
பாசிப் பயறு - கால் கிலோ
குதிரைவாலி - கால் கிலோ
சாமை அரிசி - கால் கிலோ
வரகரிசி - கால் கிலோ
முழு கறுப்பு உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்
கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - சிறிதளவு
முருங்கை கீரை - 2 கைப்பிடி
செய்முறை :
* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை அனைத்தையும் காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.
* இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
* அரைத்த மாவை உப்பு, முருங்கை கீரை போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அடையாகத் ஊற்றி, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X