search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.
    • தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * வெங்காய பக்கோடா செய்வதற்கு மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையை தூளாக்கி அதனை மாவுடன் சேர்க்கவும். அப்படி செய்தால் பக்கோடா மொறு மொறுவென்றும், ருசியாகவும் இருக்கும்.

    * சப்பாத்தியை சுட்டெடுத்ததும் எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் சப்பாத்தியின் அடியில் வியர்த்து ஈரமாவது தடுக்கப்படும்.

    * தேங்காய்த் துருவல் மீதமானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதனை மறுநாள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிப்போகாது.

    * கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்பு பலகாரங்களை நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.

    * ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.

    * தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக்கிளறி இறக்கினால் பொங்கல் சுவையாக இருக்கும்.

    * பாயசத்திற்கு உலர் திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை சிறிதாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

    Next Story
    ×