search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • புளிக்குழம்பு, ரசம், போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
    • சோறு குழையாமல் இருக்க, சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும்.

    * தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.

    * வற்றல் மிளகாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீரில் கழுவிக்கொள்வது சுகாதாரமானது.

    * தாளிக்கும்போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க அதை தண்ணீரில் கழுவி எடுத்துக்கொண்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.

    * புளிக்குழம்பு, ரசம், போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சுவையும் நன்றாக இருக்கும்.

    * காய்கறிகள் வாடிப்போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக இருக்கும்.

    * சோறு குழைந்து விடாமல் இருக்க, சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டும் வடிக்கலாம். சோறு பொல பொலவென்றிருக்கும்.

    * இரவே உருளைக்கிழங்கை நறுக்கி வைக்க வேண்டுமா? எலுமிச்சை சாற்றில் கிழங்கு துண்டுகளைப் போட்டு பிரட்டி எடுத்து வைத்தால் கிழங்கு கருத்துப் போகாமல் இருக்கும்.

    * முருங்கைக்கீரை தண்ணீர் சாறு வைக்கும்போது அரிசி களைந்த நீரில் அளவான உப்பிட்டு வெங்காயம் அரிந்து போட்டு தண்ணீர் கொதி வந்ததும் கீரையைப் போடவேண்டும். தாளிக்கும்போது மிளகாய் போட்டு சீரகத்தை நுணுக்கிப் போடவேண்டும். கடுகு போட வேண்டாம். நல்ல சுவை கிடைக்கும்.

    * சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும். காய்கள் வெந்ததும் புளி கரைசலில் கலந்து அதன்பிறகு தாளிக்கவேண்டும். தாளித்து கொதித்த பின் அரைத்த தேங்காய் விழுதைக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கினால் சாம்பார் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * பச்சை மஞ்சள் கிடைக்கும்போது இரண்டு கிலோ வாங்கி கொதி தண்ணீரில் நன்றாக அவித்து நன்றாக உலர வைத்து சுத்தம் செய்து, மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் சுத்தமான மஞ்சள் தூள் கிடைக்கும். சமையலில் இந்த மஞ்சள்தூள் நல்ல நிறமாக கண்ணைப் பறிக்கும்.

    * அரிசியையும், பருப்பையும் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் களைந்து போட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்து விடுவதுடன் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    Next Story
    ×