search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வீட்டிலேயே செய்யலாம்... வடா பாவ்...
    X

    வீட்டிலேயே செய்யலாம்... வடா பாவ்...

    • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
    • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    வடா பாவ் பன் - 10

    உருளைக்கிழங்கு - 4

    மஞ்சள் தூள் - 1 பின்ச்

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - 1/4 ஸ்பூன்

    கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

    எலுமிச்சை - 1

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    கடலை மாவு - 200 கிராம்

    தண்ணீர் - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - பொறிக்க

    பச்சை மிளகாய் - 10

    புதினா சட்னி - தேவையான அளவு

    கார சட்னி - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் உருளைக் கிழங்கை ஒரு குக்கரில் போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • வேகவைத்த உருளைக் கிழங்கை தோல்களை நீக்கி, ஒரு மத்து அல்லது மேஷர் கொண்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    • பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.


    • கிளறிய உருளைக்கிழங்கை சிறிது நேரம் ஆற விடவும்.

    • ஆறிய கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றவும்.

    • நன்கு எண்ணெய் காய்ந்தவுடன் உருட்டி வைத்திருந்த உருளைக்கிழங்கை கடலை மாவு கலவையில் சேர்த்து எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்து கொள்ளவும்.

    • அதே எண்ணெயில் பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

    • பின்னர் வடா பாவ் பன்னை எடுத்து குறுக்கே இரண்டாக வெட்டிக் கொள்ளவும். (முழுமையான வெட்டக்கூடாது)

    • வெட்டிய பன்னின் உள்ளே ஒருபக்கம் புதினா சட்னியையும், மறுப்பக்கம் சட்னியை தடவி பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை நடுவில் வைத்து அதனுடன் பொறித்து எடுத்த பச்சை மிளகாய் வைத்து பரிமாறிவும்.

    • இதோ வீட்டிலேயே எந்த தீங்கும் இல்லாத வடா பாவ் ரெடி.

    Next Story
    ×