என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலக கோப்பைச்செய்திகள்
கடைசி ஓவரில் முகமது ஷமி அடுத்தடுத்து 3 விக்கெட் கைப்பற்றி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 3-வது பந்தில் முகமது நபி, 4- வது பந்தில் அப்தாப் ஆலம், 5-வது பந்தில் முஜீபுர் ரகுமான் ஆகியோரையும் அவர் ‘அவுட்’ செய்தார்.
இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 2-வது இந்தியர் என்ற சாதனையை முகமது ஷமி பெற்றார். இதற்கு முன்பு 1987-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சேட்டன் சர்மா ‘ஹாட்ரிக்’ நிகழ்த்தி இருந்தார். சர்வதேச அளவில் 9-வது வீரர் ஆவார்.
உலகக்கோப்பையில் 10-வது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்கள் வருமாறு:-
சேட்டன் சர்மா (இந்தியா)- நியூசிலாந்து- 1987
சக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்) ஜிம்பாப்வே 1999
சமிந்தா வாஸ் (இலங்கை) வங்காளதேசம் 2003
பிரெட் லீ (ஆஸ்திரேலியா) தென்ஆப்பிரிக்கா 2003
மலிங்கா (இலங்கை) தென்ஆப்பிரிக்கா 2007
கேமர் ரோச் (வெஸ்ட் இண்டீஸ்) நெதர்லாந்து 2011
மலிங்கா (இலங்கை) கென்யா 2011
ஸ்டீவ்பின் (இங்கிலாந்து) ஆஸ்திரேலியா 2015
டுமினி (தென்ஆப்பிரிக்கா) இலங்கை 2015
முகமது ஷமி (இந்தியா) ஆப்கானிஸ்தான் 2019
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதற்காக ‘டாஸ்’ வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்தேன். ஆனால் அதன் பிறகுதான் ஆடுகளம் மெதுவாக இருந்தது தெரிய வந்தது. இதனால் 260 அல்லது 270 ரன்னை எடுத்தால் நல்ல ஸ்கோர் என்று கருதினேன்.
ஒரு கட்டத்தில் எனது மனதில் என்ன நடக்குமோ? என்ற சந்தேகம் வந்துவிட்டது. பிட்சின் தன்மையை கருத்தில் கொண்டு ஒன்று, இரண்டு ரன்களை அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆப்கானிஸ்தான் அணியில் 3 சிறந்த சுழற்பந்து வீரர்கள் இருந்தனர். எங்களது திட்டத்தை செயல்படுத்த முடியாத வகையில் அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். முகமது நபி மிகவும் அபாரமாக வீசினார்.
எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி இந்த வெற்றியை பெற்று தந்தனர். பும்ரா எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். இந்தப்போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசினார். முகமது ஷமி கடைசி ஓவரை அபாரமாக வீசினார். விஜய் சங்கரும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடுமையாக போராடி பெற்ற இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வீரரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். உலகக்கோப்பையில் ஆடுவது ஒவ்வொரு வீரருக்கும் பெருமையானதாகும்’’ என்றார்.
இந்திய அணி 6-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை வருகிற 27-ந்தேதி சந்திக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி கடுமையாக போராடிதான் வெற்றியை பறிகொடுத்தது. போட்டியில் தோற்றாலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரது மனதிலும் இடம் பெற்றுவிட்டனர். அந்த அணி 7-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில், காலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் முதல் ஓவரிலேயே இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடியது. டெய்லர் அரை சதமடித்து அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் காட்ரெல் 4 விக்கெட்டும், பிராத்வெயிட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
லீட்ஸ்:
உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து இலங்கை அணி 2-வது வெற்றியை பெற்றது.
லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்தது.
முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 85 ரன்னும், பெர்ணாண்டோ 49 ரன்னும், மெண்டிஸ் 46 ரன்னும் எடுத்தனர். ஆர்ச்சர், மார்க்வுட் தலா 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
233 ரன் இலக்கை இங்கிலாந்து எளிதில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இலங்கை வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி திணறியது. 47 ஓவர்களில் 212 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆகி 20 ரன்னில் இங்கிலாந்து அதிர்ச்சிகரமாக தோற்றது.
பென் ஸ்டோக்ஸ் கடைசிவரை போராடியும் பலன் இல்லாமல் போனது. 5-வது வீரராக களம் இறங்கிய அவர் 89 பந்தில் 82 ரன் (7 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜோரூட் 57 ரன் எடுத்தார்.
மலிங்கா 43 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். தனஞ்ஜெய டிசில்வா 3 விக்கெட்டும், உதனா 2 விக்கெட்டும், பிரதீப் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி 2-வது தோல்வியை தழுவியது. ஏற்கனவே பாகிஸ்தானிடம் 14 ரன்னில் தோற்று இருந்தது.
இலங்கையிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான மார்கன் கூறியதாவது:-
எங்களது ஆட்டத்திறனை செயல்படுத்துவதில் கனிசமான அளவில் தவறுகள் செய்து விட்டோம். போதுமான அளவு திறமையை வெளிப்படுத்த வில்லை. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது இது மாதிரி ஒரு போட்டியில் தோல்வி ஏற்படும். இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. நாங்கள் அடுத்தப் போட்டியில் எழுச்சி பெறுவோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை அணி பெற்ற 2-வது வெற்றி யாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தானை 34 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இங்கிலாந்தை வீழ்த்தியது குறித்து அந்த அணி கேப்டன் கருணா ரத்னே கூறியதாவது:-
வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இது மாதிரியான ஆடுகளத்தில் 300 ரன்களை குவிக்க முடியாது. இதனால் 250 முதல் 275 ரன் வரை விரும்பினோம். மேத்யூசின் பேட்டிங் அபாரமாக இருந்தது.
232 ரன் எடுத்தாலும் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. அவர் ஒரு சகாப்தம் இதே போல தனஞ்ஜெயா டிசில்வாவும் அபாரமாக வீசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை அணி 7-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வருகிற 28-ந்தேதி சந்திக்கிறது.
இங்கிலாந்து அணி அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 25-ந் தேதி எதிர்கொள்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்