என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலக கோப்பைச்செய்திகள்
ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது அமிர் வீசினார். லோகுஷ் ராகுல் 6 பந்திலும் ரன்ஏதும் சேர்க்கவில்லை. இதனால் முதல் ஓவர் மெய்டனாக அமைந்தது.
இருவரும் முகமது அமிர் ஓவரை மட்டும் கவனமாக விளையாடினர். மறுமுனையில் ஹசன் அலி, வஹாப் ரியாஸ் பந்து வீச்சை அடித்து விளைாடினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
பவர் பிளே-யான முதல் 10 ஓவரில் இந்தியா 53 ரன்கள் சேர்த்தது. 12-வது ஓவரை சதாப் கான் வீசினார். இந்த ஓவரில் இந்தியா 17 ரன்கள் விளாசியது. ரோகித் சர்மா 4-வது சிக்சருக்கும், ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும் விளாசினார். அத்துடன் 34 பந்தில் அரைசதம் அடித்தார்.
இந்தியா 16 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் சர்மா 58 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 33 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளன. 6 முறையும் இந்தியாவே வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஐந்து முறை இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஒரு முறை 2-வது பேட்டிங் செய்தது.
மேலும், 6 முறையும் டாஸ் வென்ற அணி பேட்டிங்கையே தேர்வு செய்தது. ஆனால், இந்த முறை சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் சேஸிங் செய்ய மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதாலும், மழை அச்சுறுத்தல் இருப்பதால் முதலில் பந்து வீசுவதே சிறந்ததாக இருக்கும் என்பதாலும் சர்பராஸ் அகமது இந்த முடிவை எடுத்துள்ளார்.
மிகுந்த நெருக்கடி கொண்ட போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முதன்முறையாக மாற்றி யோசித்ததற்கு பலன் கிடைக்குமா? என்பது போட்டியின் முடிவில்தான் தெரியவரும்.
இந்திய அணியில் ஷிகர் தவானுக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப்பில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் 48 ஒவர்களாக குறைக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரதுல்லா ஸசாய் 22(23), நூர் அலி ஸத்ரான் 32(58), ரஷீத் கான் 35(25) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை எடுத்து வெளியேறினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 28.4 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 131 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிக பட்சமாக தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் குயின்டன் டி காக் 68 (72), ஹாஷிம் அம்லா 41 (83), ஆண்டில் பெஹ்லுக்வாயோ 17 (17) ரன்கள் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்படின் நைப் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன், இலங்கை அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 153 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உதானா, டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கருரத்னே, குசல் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் கொடுத்தனர். இலங்கை அணியில் அதிகப்பட்சமாக கருரத்னே 97 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4, ரிச்சர்ட்சன் 3, கம்மின்ஸ் 2, ஜாசன் பேண்ட்கிராப்ட் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
லண்டன்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 17-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. லண்டனில் ஓவல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா- கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 2 முடிவு இல்லை. ஆகியவற்றுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் (7 விக்கெட்), வெஸ்ட் இண்டீஸ் (15 ரன்), பாகிஸ்தான் (41 ரன்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. இந்தியாவிடம் 36 ரன்னில் தோற்றது.
இலங்கையை இன்று வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 34 ரன்னில் வென்றது. பாகிஸ்தான், வங்காள தேசத்துடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
கார்டிப் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டூபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா 4 ஆட்டத்தில் விளையாடி இதுவரை வெற்றி பெறவில்லை.
இங்கிலாந்துடன் 104 ரன் வித்தியாசத்திலும், வங்காள தேசத்திடம் 21 ரன் வித்தியாசத்திலும் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. வெஸ்ட் இண்டீசுடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது.
1 புள்ளியுடன் இருக்கும் தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்றது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணியிடம் தோற்று இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.
இதனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது. ஆகையால் நியூசிலாந்துக்கு எதிராக 136 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியிலும் திணறியது. ஆனால் மழை பெய்ததால் டக்வொர்த் விதிப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டதால் வெற்றி பெற்றது.
அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராகவும், வங்காள தேசத்திற்கு எதிராகவும் விளையாட இருந்த ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. இந்த இரண்டு ஆட்டங்களும் பிரிஸ்டோலில் நடைபெறுவதாக இருந்தது. பிரிஸ்டோல் ஆடுகளமும் பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை அணி நாளை ஆஸ்திரேலியாவை லண்டன் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது. லண்டன் ஓவலில் 300 ரன்களுக்கு மேல் சர்வ சாதாரணமாக குவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்களுக்கு எதிரான போட்டிக்கான ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுவது போல் தெரிகிறது. இதனால் ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என்று இலங்கை அணியின் மானேஜர் அஷாந்தா டி மெல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அஷாந்தா டி மெல் கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய நான்கு போட்டிக்கான ஆடுகளங்களும் புற்கள் நிறைந்து காணப்பட்டது. ஐசிசி எங்களுக்காக ‘க்ரீன் பிட்ச்’ தயார் செய்துள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடியதில் இருந்து நாங்கள் இதை தெரிந்து கொண்டோம்.
அதே மைதானத்தில் மற்ற அணிகள் மோதும் ஆடுகளங்கள் புற்கள் காய்ந்து, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கான ஆடுகளங்கள் க்ரீனாக உள்ளது. இதுபற்றி நாங்கள் புகார் அளிக்கிறோம். ஐசிசி நடத்தும் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிராக மட்டும் ஒரு குறிப்பிட்ட ஆடுகளமும், மற்ற அணிகளுக்கு வேறுவிதமான ஆடுகளங்களும் தயார் செய்தது நியாயமானது அல்ல.
கார்டிப் போட்டிக்கான பயிற்சியின்போது மூன்று வலைகளுக்குப் பதிலாக இரண்டு வலைகள் மட்டுமே தயார் செய்து தந்தனர். நாங்கள் தங்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ரிலாக்ஸ் ஆக நீச்சல் குளம் ஒவ்வொரு அணிகளுக்கும் தேவை. அதேவேளையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு பிரிஸ்டோலில் ஒதுக்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இருந்தது’’ என்றார்.
இலங்கை அணி மானேஜரின் இந்த குற்றச்சாட்டுக்களை ஐசிசி முற்றிலும் மறுத்துள்ளது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் லிவிஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லிவிஸ் 2 ரன்க்ள எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். கிறிஸ் கெய்ல் 41 பந்தில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 56 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது.
4-வது விக்கெட்டுக்கு பூரன் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் வேகம் எடுத்தது. முன்னணி பந்து வீச்சாளர்களை இந்த ஜோடி சிறப்பாக எதிர்கொண்டதால், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பகுதி நேர பந்து வீச்சாளரான ஜோ ரூட்டை பந்து வீச அழைத்தார்.
ஹெட்மையர் 48 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த ஜோசன் ஹோல்டர் 9 ரன்கள் எடுத்த நிலையிலும் ரூட் பந்தில் வீழ்ந்தனர். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது. பூரன் 78 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பூரன் - ஹெட்மையர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த்ரே ரஸல் (21), பிராத் வைட் (14), காட்ரெல் (0), கேப்ரியல் (0) அடுத்தத்து வெளியேற வெஸ்ட் இண்டீஸ் 44.4 ஓவரில் 212 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஜாப்ரா ஆர்சர், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணி வீரர்கள் தங்கும் விடுதியில் உள்ள ஜிம்மில் போதுமான அளவிற்கு உபகரணங்கள் இல்லை என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வெளியில் உள்ள தனியார் ஜிம்மில் இந்திய வீரர்கள் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.
ஏற்கனவே மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு ஐசிசி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியாக செய்யாததுதான் காரணம் என்றும், வீரர்கள் பஸ்சில் செல்வதற்குப் பதிலாக ரெயிலில் செல்வதால் ரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு வீரர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக உள்ளது என்றும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்