என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
காவிரி நீரை பெற குமாரசாமியுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடை பெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-
நீண்ட நாட்களாக பொது மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையாக, தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சனையாக உள்ள காவிரிப் பிரச்சனையில் சட்டரீதியாக ஒரு முடிவை நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால், அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கக் கூடியவற்றை நிறைவேற்ற முன்வருவார்களா, பயன் கிடைக்குமா, விவசாயிகளின் வாழ்வாதாரம் வளம் அடையுமா என்ற நிலையில் இருக்கிறோம்.
இந்நிலையில், இங்கிருக்கும் அரசு என்ன செய்ய வேண்டுமென்றால், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற நிலையில் ஒரு புதிய அரசு பொறுப்பேற்கவிருக்கிறது,
அப்படி புதியதாக பொறுப்பேற்கும் முதல்- அமைச்சரோடு, இங்கிருக்கும் முதலமைச்சர் ஒரு நட்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு, சட்டரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், வரும் ஜூன் மாதம் 12-ந் தேதி பெற வேண்டிய காவிரி நீரை நட்புரீதியாக பெற்றாக வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளாக நமக்கு வர வேண்டிய நீர் தடைபெற்று இருப்பது அனைவருக்கும் தெரியும். ஒருவேளை நமக்கு வர வேண்டிய நீரை பெறுவதில் தமிழக அரசு தவறினால், மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள, குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய நிலை வரும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
காவிரி உரிமைக்காக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டத்தைக் கண்டு, உச்ச நீதிமன்றமே அதற்கு மதிப்பளித்து சட்டரீதியான உரிமையை அளித்திருக்கிறது.
ஆகவே, தி.மு.க.வின் போராட்டங்களில் பெருமளவு பங்கேற்று, ஆதரவு தந்திருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #Cauveryissue #KumaraSamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்