search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள் - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
    X

    நீட் தேர்வை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள் - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

    நீட் தேர்வை சுய நலத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்படுத்துவதாக அரசியல் கட்சிகள் மீது மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #BanNEET #NeetPolitics
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது போல இந்த ஆண்டு மாணவி பிரதீபாவின் மரணமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    இந்த விவகாரம் நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.



    இந்த நிலையில் நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா மரணம் அடைந்தது குறித்து மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏறப்டுத்துகிறது. இந்த விஷயத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு நல்வழி காட்ட வேண்டும். நீட் தேர்வை கட்சிகள் சுய நலத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்படுத்துகின்றன. நீட் தேர்வை காரணம் காட்டி பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்கின்றனர்’ என்று குற்றம் சாட்டினார் பொன்.ராதாகிருஷ்ணன். #BanNEET #NeetPolitics

    Next Story
    ×