search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக கவர்னரை எதிர்த்து அனைத்து கட்சிகளும் போராடும் நிலை ஏற்படும்: முத்தரசன் பேட்டி
    X

    தமிழக கவர்னரை எதிர்த்து அனைத்து கட்சிகளும் போராடும் நிலை ஏற்படும்: முத்தரசன் பேட்டி

    கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் வகையில் உள்ளதால் கவர்னரை எதிர்த்து அனைத்து கட்சிகளும் போராடும் நிலை ஏற்படும் என முத்தரசன் கூறியுள்ளார். #mutharasan #tngovernor

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கடசியின் மாநில செயலாளர் இரா.முத் தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு நாமக்கலில் கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் 192 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கும் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. மாநில அரசு , மத்திய அரசின் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதால் கடும் அடக்கு முறை நடவடிக்கைகளை மக்கள், அரசியல் கட்சியினர் மீது மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல் தமிழக கவர்னர் தமக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்புகளை மீறி ஜனாதிபதி ஆட்சி நடப்பதை போல மாநில அரசை நிராகரித்து விட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.


    கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் வகையில் உள்ளது. கவர்னர் சட்டப்படி நடந்து கொள்கிறார் என்றும், எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது போல் வெளியான அந்த அறிக்கை கண்டனத்திற்குரியது. இது போன்ற நடவடிக்கைகளை கவர்னர் நிறுத்தாவிட்டால், அவரை எதிர்த்து போராடும் நிலை அனைத்து கட்சிகளுக்கும் ஏற்படும்.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலையை மறுபரி சீலனை செய்ய வேண்டும். எங்கள் கட்சி சர்பில் முதற் கட்டமாக வரும் 4-ந் தேதி சேலத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதேபோல் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #tngovernor

    Next Story
    ×