search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆட்சியில் இருப்பதால்தான் அ.தி.மு.க. உயிரோடு இருக்கிறது- தினகரன்
    X

    ஆட்சியில் இருப்பதால்தான் அ.தி.மு.க. உயிரோடு இருக்கிறது- தினகரன்

    ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால்தான் அதிமுக உயிரோடு இருக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #AMMK #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சேலம் பசுமை வழி சாலை போடுவதற்கு மக்களிடம் கருத்துகளை கேளுங்கள் என்று அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதை அரசு கண்டு கொள்ளவில்லை. மக்களை துண்புறுத்துகிறார்கள். மக்களிடம் கருத்துகளை கேட்டால் தான் உண்மை தெரிய வரும்.

    பசுமை வழி சாலையை எதிர் பதில் எங்கள் வீரியம் குறையவில்லை. வருகின்ற 6-ந்தேதி திருவண்ணாமலையிலும், 9-ந்தேதி அரூரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தோம். போலீஸ் அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெறுவோம். நிச்சயமாக போராட்டம் நடக்கும்.



    கர்நாடகாவில் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

    நீதிமன்றம் சரியாக முடிவு எடுத்ததால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது. தமிழ்நாடு அரசு இதுவரை மக்களுக்கு என்ன தான் செய்தது. தமிழகத்தில் அரசு ஒன்று இருப்பதாக மக்கள் யாரும் கருதவில்லை. அரசாங்கம் மக்களை துன்புறுத்துவதாக மக்கள் நினைகிறார்கள். விரைவில் இந்த அரசுக்கு நல்ல முடிவு வரும்.

    90 சதவீத ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அ.தி.மு.க. ஓடிக்கொண்டிருக்கிறது. ஆட்சி இறங்கினால் எல்லாரும் எங்களிடம் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDinakaran
    Next Story
    ×