search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் 100 புதிய பஸ்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    X

    சென்னையில் 100 புதிய பஸ்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    • உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • 88 புதிய பஸ்கள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள்.

    சென்னை:

    சென்னையில் மாநகர் போக்குவரத்து கழகத்தின் 88 புதிய பஸ்கள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்த துடன் புதிய பஸ்சில் ஏறி சிறிது தூரம் வரை பயணம் செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர்.

    புதிதாக துவக்கி வைக்கப்பட்ட பஸ்கள் பிராட்வே, கிளாம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, திருப்போரூர், திருவொற்றியூர், திருவேற்காடு, தி.நகர், மகாபலிபுரம், திருவான்மியூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, கோவளம் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீல நிறத்தில் விடப்பட்டு உள்ள இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் ஏறுவதற்கு சிறப்பு சாய் தளம், சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

    Next Story
    ×