என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 91 வழக்குகளில் 108 பேர் கைது
- விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 91 வழக்குகளில் 108 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 64 லிட்டர் சாராயம், 32 லிட்டர் புதுவை மாநில சாராயம் மற்றும் 72 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரப்பின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்துதல். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மதுபானங்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பராக் போன்ற போதை புகையிலைப் பொருட்கள், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி வேட்டை நேற்று நடைபெற்றது. இதில் மது வழக்குகள் 63 பதிவு செய்யப்பட்டு 63 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 64 லிட்டர் சாராயம், 32 லிட்டர் புதுவை மாநில சாராயம் மற்றும் 72 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், 12 பேர் மீது குட்கா வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ குட்கா பொருட்கள் கைப்ப ற்றப்பட்டது. இதேபோல 5 பேர் கஞ்சா வழங்கில் கைது செய்யப்பட்டு 380 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தவிர 26 நபர்கள் சூதாட்ட வழக்கிலும், 2 பேர் லாட்டரி விற்பனை வழக்கிலும் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம், 91 வழக்குகளில் 108 பேர் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்