search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது

    • பணம் வைத்து சூதாடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • கோட்டை காலனி பகுதியை சேர்ந்த குமார் (20) உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கந்திகுப்பம் அருகே உள்ள உரக்கம், மேல் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணன் (34), நாகன பள்ளியை சேர்ந்த சகாதேவன் (44), பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சபரி (26), விக்கி (26,) ஓசூர் அருகே உள்ள பந்தலபள்ளியை சேர்ந்த வினோத் குமார் (41), குந்தாரப்பள்ளியை சேர்ந்த இமை (30)வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரிஜித்ரன் (21), சூளகிரி அருகே உள்ள பேடாரப்பள்ளியை சேர்ந்த மகேந்திரன் (27), நகர பள்ளியை சேர்ந்த குலசேகரன் (28), ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த விக்னேஷ் (27), கோட்டை காலனி பகுதியை சேர்ந்த குமார் (20) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×