என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆசிரியையிடம் 11 பவுன் செயின் அபேஸ்
- பின்னர் தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.
- இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன்.
இவரது மனைவி அந்தோணியம்மாள் ( வயது 52).
இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தஞ்சை ஆத்துப்பாலத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் பஸ்ஸில் ஏறினார்.
பின்னர் தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.
அப்போது தான் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பலரிடம் விசாரித்து பார்த்தும் நகைகள் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
அப்போதுதான் ஓடும் பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் நகையை அறுத்துக் கொண்டு திருடி சென்றிருக்கலாம் என சந்தேகப்பட்டார்.
இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்