என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தூத்துக்குடியில் பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு
- கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்மநபர்கள் அவரை கீழே தள்ளி நகையை பறித்து சென்றுள்ளனர்.
- இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சால்ட் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது54).
இந்நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவன்-மனைவி இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.அவர்கள் கோரம்பள்ளம் அடுத்த மறவன்மடம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து சென்றனர். இதனால் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இது தொடர்பாாக அவர் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்