search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சுதந்திர தினத்தையொட்டி 1,190 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    சுதந்திர தினத்தையொட்டி 1,190 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • தொடா் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம் மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு நாளை (புதன் கிழமை) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை- 470 பஸ்களும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 365 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்க ளுக்கு நாளை 70 பஸ்களும், வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை 65 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து புதன், வெள்ளி மற்றும் சனிக்கி ழமை ஆகிய நாள்களில் 20 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும், வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×