search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
    X

    பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

    • சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது
    • அதனை தடுக்க வந்த ரவியின் மனைவி இந்துமதியை சரமாரியாக 2 பேரும் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அத்திபாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது இந்துமதி (வயது19).

    ரவியின் உறவினர்களான அதேபகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (60), பிரவீன்குமார் (45). இவர்களுக்கும் ரவிக்கும் இடையே பூர்வீக சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ரவியை தாக்க முயன்றனர். அப்போது அதனை தடுக்க வந்த ரவியின் மனைவி இந்துமதியை சரமாரியாக 2 பேரும் தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த இந்துமதியை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரவி சிங்காரபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயன், பிரவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×