என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வாகனங்களை அடித்து சூறையாடிய 2 பேர் கைது
- வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் வாகனங்கள், ஒரு கார், 2 மோட்டார்சைக்கிள்களை 3 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்
- சிவசுப்பிர மணியனின் கடைக்குள் புகுந்து நாற்காலிகள், மேசைகளை உடைத்து சேதப்படுத்தினார்கள்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள நெருமருதி பக்கமுள்ள தே.திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் சிவசுப்பிர மணியம் (வயது 42). அருகில் உள்ள பில்லனகுப்பம் பக்கமுள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (41). சிவசுப்பிரமணின், தனது சகோதரர் சக்திவேல் என்பவருடன் சேர்ந்து எம்.சாண்ட் மணல் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் திப்பிரெட்டி அள்ளியை சேர்ந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் திருமணம் செய்யாமல் கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர்.
இதில் சக்திவேல் அந்த ஆணுக்கு ஆதரவாகவும், சசிக்குமார் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 20-ந் தேதி இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிவசுப்பிரமணியம் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் வாகனங்கள், ஒரு கார், 2 மோட்டார்சைக்கிள்களை 3 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். மேலும் சிவசுப்பிர மணியனின் கடைக்குள் புகுந்து நாற்காலிகள், மேசைகளை உடைத்து சேதப்படுத்தினார்கள்.இது குறித்து சிவசுப்பிரமணியன் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சசிக்குமார் (41), வதனோடி (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்