search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 2 பேர் கைது

    • போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • இவர்களிடமிருந்து ரூ.11,500 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள ஒட்டு பள்ளம் பகுதியில், முனியப்பன் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு பாலித்தின் கவரில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்த பொம்மிடி அருகே உள்ள தீ.பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் (வயது 21), சேட்டு (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஜே.சூர்யா (எ) பாண்டு என்பவர் தலைமறைவாகி விட்டார்.

    மேலும் இவர்களி டமிருந்து ரூ.11,500 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×