என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
- திருக்கோவிலூரில் இருந்து கடலூர் நோக்கி சென்ற மற்றொரு கார் இந்த கார் மீது மோதியது.
- 4 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் தோட்டப்பட்டு சேர்ந்தவர் செந்தில் (வயது 50). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு வேலைக்கு செல்வதற்காக காரில் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சென்றார். அப்போது திருக்கோவிலூரில் இருந்து கடலூர் நோக்கி மற்றொரு கார் இந்த கார் மீது மோதியது. பயங்கர சத்தத்துடன் 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கடலூர் கோண்டூர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி, மோட்டார் சைக்கிள் சென்றவர்கள் மீது கார் மோதி அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து விபத்தில் அடிபட்ட 4 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையின் ஓரத்தில் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டு இருந்த தால் அருகாமையில் இருந்த பெரிய பள்ளத்தில் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்