search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் குழந்தை தொழிலாளர்கள்  2 பேர் மீட்பு
    X

    கோவையில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு

    • கோவையில் ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
    • உணவ உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை,

    கோவையில் கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்ப டுவதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய குழந்தை தொழி லாளர் திட்ட அதிகாரி களுக்கு கோவை யில் உள்ள சில கடைகள் மற்றும் ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்ப ட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

    அதன்படி, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சவுரிபாளையம் உடையாம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தில், 13 வயது சிறுவனை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. அதிகாரிகள் சிறுவனை மீட்டு பீளமேடு போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், சிறு வனை பணிக்கு அமர்த்திய உணவக உரிமையாளர் ஜெகன் (வயது 30) என்பவர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல், சவுரிபா ளையம் உடையாம்பாளை யத்தில் உள்ள பூக்கடையில் வேலை பார்த்த 12 வயது சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் சிறுவனை பணிக்கு அமர்த்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் (33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×