search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பிறந்தநாள் கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி
    X

    பிறந்தநாள் கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

    • 3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.
    • இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவர் உடையாப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ரஞ்சித்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். அவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டார்.

    ரஞ்சித்குமாரின் நண்பர்கள் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர் (22), ஓமலூர் பாகல்பட்டியை சேர்ந்த கவுதம் (19). இவர்கள் இருவரும் ரஞ்சித்குமாரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று அவரை அழைத்து வந்தனர்.

    3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.

    இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். கவுதம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். சுந்தர் அரியனூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×