என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
போடியில் கனமழைக்கு 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்
Byமாலை மலர்23 Nov 2023 11:05 AM IST
- போடியில் பெய்த கனமழைக்கு மூதாட்டியின் வீடு உள்பட 2 வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
- பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சிலமலை நடுத்தெரு பகுதியில் சரஸ்வதி(50) என்பவர் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இவரது வீடு ஏற்கனவே பலம் இழந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக சரஸ்வதிக்கு எந்த காயமும் ஏற்படடவில்ைல. இருந்தபோதும் வீட்டில் இருந்த பொருட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தது.
இதேபோல் போடி யை சேர்ந்த செல்வராஜ் தனது மனைவி செல்வி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீடு கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X