search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி
    X

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி

    • கிழக்கு கடற்கரை சாலையில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நாடியம்மன்கோவில் சாலை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது58), இவரது மனைவி ஜெயலட்சுமி (43), கூலி தொழிலாளர்கள்.

    இந்நிலை யில், நேற்று சேதுபாவா சத்திரத்தில் இருந்து கட்டுமாவடி நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கழுமங்குடா சந்திப்பு பகுதியில் கோபால், ஜெயலட்சுமி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இது குறித்து சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×