என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
களக்காடு அருகே டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
- மால்வின் நேற்று இரவு டிராக்டரில் உரம் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார்.
- ஆத்திரம் அடைந்த ஆல்வின், செல்வதாஸ் ஆகியோர் மால்வினை அவதூறாக பேசி தாக்கினர்.
களக்காடு:
களக்காடு கக்கன்நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மால்வின் (வயது 20), டிரைவர். நேற்று இரவு இவர் டிராக்டரில் உரம் ஏற்றி கொண்டு, மூங்கிலடி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது களக்காடு மிஷின் பள்ளி தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஆல்வின் (24), மூங்கிலடியை சேர்ந்த தானியேல் மகன் செல்வதாஸ் (26) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து, டிரா க்டரை வழிமறித்து நிறுத்தி னர். பின்னர் அவர்கள் மால்வினி டம், மோட்டார் சைக்கிளுக்கு வழி விட மாட்டியா? எனக் கேட்டனர். இதில் அவர்களு க்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆல்வின், செல்வதாஸ் ஆகியோர் மால்வினை அவதூறாக பேசி தாக்கினர்.
மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, களக்காடு இன்ஸ் பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆல்வின், செல்வதாஸ் ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்