என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
- போலீசார் பெல்லுஅள்ளி அண்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பிளாஸ்டிக் பையில் 1½ கிலோ கஞ்சா மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சின்னஏரி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அதேபகுதியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திருப்பதி மகன் விஜி (வயது26) என்பவர் பிளாஸ்டிக் பையில் 1½ கிலோ கஞ்சா மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மாரண்ட அள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் பெல்லுஅள்ளி அண்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில் பெல்லுஅள்ளி அண்ணாநகரைச் சேர்ந்த ஜெகநாதன் (62) என்பவர் பையில் 200 கிராம் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்