search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இரும்பு கம்பிகள் திருட முயன்ற 2 பேர் கைது
    X

    இரும்பு கம்பிகள் திருட முயன்ற 2 பேர் கைது

    • 2 பேர் அங்கிருந்த 85 கிலோ இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர்.
    • அவர்கள் 2 பேரையும் பேலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோவை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 32). இவர் பேளகொண்ட ப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது உள்ளே நுழைந்த 2 பேர் அங்கிருந்த 85 கிலோ இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர்.

    இதை கவனித்த சம்பத்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூர் கொத்தகொண்டப்பள்ளி ராபர்ட் (32), எஸ்.பி.எம். காலனி லோகேஷ்குமார் (22) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் பேலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×