search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புகையிலை பொருட்களை  காரில் கடத்திய 2பேர் கைது
    X

    புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2பேர் கைது

    • அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காரையும் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.

    அதில் 208 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில் சென்னை முகமலை சென்னிரகுப்பம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது34), போரூர் லட்சுமணன் (38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காரையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×