search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது
    X

    தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது

    • தருமபுரி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒட்டப்பட்டி பொதுப் பணித்துறை காலனி பகுதிகளில் தீபாவளிக்கு முன்பு தொடர்ந்து 2 வீடுகள் உடைக்கப்பட்டு சுமார் 35 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சார்ந்த திருமால் (வயது37) என்பவரும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சார்ந்த முத்துபாலன் (28) ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    கைதான 2 பேரிடம் போலீசார் விசாரித்ததில், இவர்கள் இருவரும் சிறையில் இருக்கும் போது நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர் வெளியில் வந்ததும் ஒரு வழக்கில் கையெழுத்திட பஸ்சில் செல்லும்போது தருமபுரியில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் தனது நண்பரான முத்து பாலனுக்கு தகவல் தெரிவித்து தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும், அதிமான் கோட்டையில் பதியப்பட்ட 6 கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கைதான 2 பேரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 35 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தருமபுரி கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர்.

    Next Story
    ×