search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குடிநீர்கேட்டு, காலி குடங்களுடன் 2 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    குடிநீர்கேட்டு, காலி குடங்களுடன் 2 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    • பல மாதங்களாக தண்ணீர் இன்றி தவிப்பு
    • பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பண்டஅள்ளி ஊராட் சிக்குட்பட்டது ஜர்க்கான் கொட்டாய் மற்றும் காராஜ் நகர் குடியிருப்பு கிராமங் கள். இந்த இரு கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடியி ருப்பு வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

    இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப் பட்டு ஓர் ஆண்டுக்கு மேலா கியும், இன்றளவும், சம்மந் தப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம், இரு கிராமத்தை சேர்ந்த குடியிருப்பு மக்க ளுக்கு குடிநீர் வழங்கப்ப டாமல், கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இதனால் இரு கிராமங்களை சேர்ந்த குடியிருப்பு மக்கள், குடிநீருக்காக, பல கிலோமீட் டர் தூரம், மாற்று கிராமங்க ளுக்கு நாள்தோறும் நடந்தே சென்று, குடங்களில் குடிநீர் எடுத்துவரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    குடிநீர் இல்லாமல் தவிக்கும், இரு கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் நாள்தோறும் தவித்து வருகின்றனர்.

    பல லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட, இரு கிராமங்களில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம், குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்ககோரி, சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு பலமுறை கோரிக் கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சம்மந்தப்பட்ட இரு கிராமங்களை சேர்ந்த குடியிருப்பு பொதுமக்களும், காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு, சம்மந்தபட்ட இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் முன்பு, குடிநீர் வழங்கிட விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தின் மீது சம்மந்தப்பட்ட அதிகா ரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், இரு கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பு மக்களும் ஒன்றிணைந்து, காலிகுடங்க ளுடன் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில், விரைவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடு வோம் என கோரிக்கை விடுத்துள்ளனர். இருகி ராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்தும், குடிநீர் வழங்க கோரி, ஒரே ஊராட்சியில், இரு கிராமமக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×