search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் பஸ் நிலையத்தில்   பெண்ணிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது
    X

    கைது செய்யப்பட்ட பெண்களை படத்தில் காணலாம்.

    தியாகதுருகம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது

    • சுதா (46) மற்றும் இவரது மகள் ஆகியோர் சென்னை செல்வதற்காக தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது சுதா தன் கையில் வைத்திருந்த பையை அருகில் இருந்த சிமெண்ட் கட்டையின் மீது வைத்துள்ளார்.
    • சற்று நேரத்தில் திரும்பிப் பார்க்கும்போது பையில் இருந்த பர்ஸ் மற்றும் அதில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணம் காணவில்லை. இதுகுறித்து சுதா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கீழ்ப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 50) விவசாயி. இவரது மனைவி சுதா (46) மற்றும் இவரது மகள் ஆகியோர் சென்னை செல்வதற்காக தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது சுதா தன் கையில் வைத்திருந்த பையை அருகில் இருந்த சிமெண்ட் கட்டையின் மீது வைத்துள்ளார். சற்று நேரத்தில் திரும்பிப் பார்க்கும்போது பையில் இருந்த பர்ஸ் மற்றும் அதில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணம் காணவில்லை. இதுகுறித்து சுதா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர், விசாரணையில் மதுரை மாவட்டம் தத்தனேரி செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மனைவி தமிழ்ச்செல்வி (55), மற்றும் அேத பகுதியைச் சேர்ந்த ராசு மனைவி மூக்காயி (70) ஆகிய இருவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பெண்களையும் கைது செய்தனர்.

    Next Story
    ×