search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரத்தில் படங்களில் உள்ள பெயரை கூறி  பதக்கம், சான்றிதழ் பெற்று 2 வயது சிறுவன் சாதனை
    X

    சிறுவன் பிரணவ் பெற்ற பதக்கங்கள், சான்றிதழ்களை படத்தில் காணலாம். அருகில் தாய் மணிமேகலை.


    பென்னாகரத்தில் படங்களில் உள்ள பெயரை கூறி பதக்கம், சான்றிதழ் பெற்று 2 வயது சிறுவன் சாதனை

    • பென்னாகரத்தில் படங்களில் உள்ள பெயரை கூறி பதக்கம், சான்றிதழ் பெற்று 2 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
    • சிறுவன் தன்னுடைய 1½ வயதில் இருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ்கள், பதக்கங்கள் வாங்கி குவிந்துள்ளான்.

    தொப்பூர்

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முள்ளுவாடி பகுதியில் அசோக்குமார் மணிமேகலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தற்போது 2 வயதில் பிரணவ் என்ற மகன் உள்ளான். பிரணவ் தனது 1½ வயதிலிருந்தே தன் அதீத திறமைகளை வெளிகாட்ட தொடங்கினான்.

    இதில் தற்போது வரை அவன் பள்ளிக்கு செல்லாமல் தன்னுடைய தாய் சொல்லிக் கொடுப்பதை அப்படியே முழுமையாக கற்றுக்கொண்டு எந்த நேரத்திலும் நாட்டின் தலைநகரம், பழங்கள், காய்கறிகளின் பெயர்களை தெரிவித்து வருகின்றான்.

    தன்னுடைய 1½ வயதிலேயே போட்டிகளில் பங்கெடுக்க தொடங்கியுள்ளான். வனவிலங்குகள், காய்கறிகள், பழங்கள், மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள், அரசியல் தலைவர்கள் பெயர்களையும் படத்தைக் காட்டினாலே ஆங்கிலத்திலும், தமிழிலும் சர்வ சாதாரணமாக கூறிகிறான். இதேபோல் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் உள்ளிட்டவற்றை சரளமாக தெரிவித்து வருகின்றான். இதற்காக பிரணவ் தனது 1½ வயதிலேயே அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட், இந்தியன்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட், இந்தியன் புக் ஆப் தி ரெக்கார்ட் உள்ளிட்டவற்றில் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார். தற்போது அடுத்த கட்டமாக அறம் விருதுகளுக்கும் பிரணவ் தேர்வாகியுள்ளார். இதனால் அவருடைய தாய் தந்தையர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×