என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்22 July 2022 10:25 AM GMT
- தப்பி ஓட முயன்றதை சுதாரித்து கொண்ட போலீசார் சுற்றி வளைத்து இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
- 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அதற்குள் சுதாரித்து கொண்ட போலீசார் சுற்றி வளைத்து 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் தஞ்சை சிங்கபெருமாள் கோவில் குளம் வடகரை ரெட்டிபாளையம் ரோடு சூரியபிரகாஷ் (வயது 24), காந்திபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (25) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து சூரியபிரகாஷ், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X