search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோபிநாதம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
    X

    கோபிநாதம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

    • மாலக்காபாடி ஆற்றுபாலம் அடியில் 2 பேர் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டியை அடுத்த மாலக்காபாடி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மாலக்காபாடி ஆற்றுபாலம் அடியில் 2 பேர் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். உடனே போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    இதில் குருமியம்பட்டியைச் சேர்ந்த அலெக்சாண்டர் (வயது25), மாலக்காபாடியை சேர்ந்த சூர்யதீபக் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறை அடைத்தனர்.

    Next Story
    ×