என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கோபிநாதம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்9 May 2023 9:32 AM GMT
- மாலக்காபாடி ஆற்றுபாலம் அடியில் 2 பேர் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
- போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டியை அடுத்த மாலக்காபாடி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாலக்காபாடி ஆற்றுபாலம் அடியில் 2 பேர் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். உடனே போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
இதில் குருமியம்பட்டியைச் சேர்ந்த அலெக்சாண்டர் (வயது25), மாலக்காபாடியை சேர்ந்த சூர்யதீபக் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறை அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X