search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடையில் 2 வாலிபர்கள் கைது
    X

    காரமடையில் 2 வாலிபர்கள் கைது

    • ராஜ்குமார் கடையில் இருந்த இஸ்திரி பெட்டியை மர்ம நபர் திருடி சென்றார்.
    • போலீசார் 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    காரமடை அருகே உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவர் அந்த பகுதியில் லான்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த இஸ்திரி பெட்டியை யாரோ மர்ம நபர் திருடி சென்றனர்.

    இது குறித்து அவர் காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இஸ்திரி பெட்டியை திருடிய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மோகன் (24), சந்துரு (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×