என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி-கணவர் படுகாயம்
Byமாலை மலர்15 Jun 2016 5:04 PM IST (Updated: 15 Jun 2016 5:04 PM IST)
தியாகதுருகம் அருகே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே உள்ள சின்னமாம்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26) விவசாயி. இவரது மனைவி பார்வதி(24). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. தர்ஷன் என்ற 3 மாத கைக்குழந்தை உள்ளது.
குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையொட்டி மணிமாறனும், பார்வதியும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் குழந்தையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.
தியாகதுருகம் புறவழிச் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிமாறன், பார்வதி, தர்ஷன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் பார்வதி பரிதாபமாக இறந்தார்.
மணிமாறன், தர்ஷன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து தியாகதுருகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தியாகதுருகம் அருகே உள்ள சின்னமாம்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26) விவசாயி. இவரது மனைவி பார்வதி(24). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. தர்ஷன் என்ற 3 மாத கைக்குழந்தை உள்ளது.
குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையொட்டி மணிமாறனும், பார்வதியும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் குழந்தையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.
தியாகதுருகம் புறவழிச் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிமாறன், பார்வதி, தர்ஷன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் பார்வதி பரிதாபமாக இறந்தார்.
மணிமாறன், தர்ஷன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து தியாகதுருகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X