search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தின் 122–ம் ஆண்டு பெருவிழா நாளை மறுநாள் நடக்கிறது
    X

    இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தின் 122–ம் ஆண்டு பெருவிழா நாளை மறுநாள் நடக்கிறது

    மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தின் 122–ம் ஆண்டு பெருவிழா நாளை மறுநாள் நடக்கிறது

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு பிரசித்தி பெற்ற திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.

    மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வெள்ளியாக கருதப்பட்டு பக்தர்களின் வேண்டுதலுக்காக கூட்டு திருப்பலி நடைபெற்று வருகிறது.

    இதில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் திரு இருதய பெருவிழா 10 நாட் கள் நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 24–ந்தேதி தேவாலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜா கலந்து கொண்டு மறையுரை ஆற்றினார். முக்கிய விழாவான திரு இருதய ஆண்டவர் அலங்கார தேர்பவனி மற்றும் பெருவிழா நாளை மறுநாள் (1–ந்தேதி) நடைபெறுகிறது.

    அன்று காலை 7 மணிக்கு திருத்தலத்தில் திருஇருதய பெருவிழா திருப்பலி, நவநாள், நற்கருணை ஆராதனையுடன் தொடங்குகிறது. 

    அதைத்தொடர்ந்து 11 மணிக்கு திருவிழா திருப்பலி பூஜையை சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் இரக்கத்தின் தேற்றுபவர் நானே’ என்ற தலைப்பில் மறையுரை கூறி தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்கு நிறைவு திருப்பலி நடக்கிறது. மின்விளக்கு அலங்கார தேர்ப்பவனியை சிவங்கை மறை மாவட்ட பொருளாளர் மைக்கேல் ராஜ் தொடங்கி வைக்கிறார்.

    2–ந்தேதி (சனிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு ஓரியூர் தூய அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி இளங் கேஸ்வரன் சிறப்பு திருப்பலி பூஜை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு செக்காலை பங்கு தந்தை வின்சென்ட் அமல்ராஜ், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி துணை முதல்வர் ஜோசப் ஜான் கென்னடி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    திருஇருதய பெருவிழா ஏற்பாடுகளை இடைக்காட்டுர் திருத்தல பணியாளர் ரெமிஜியஸ் மற்றும் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளையோர் பேரவை, மரியின் ஊழியர்கள், பங்கு இறை மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×